சைக்கோ படத்திற்கு தடை கேட்டு பைனான்சியர் ஒருவர் தொடர்ந்துள்ள வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன், சிங்கம் புலி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சைக்கோ.
வரும் ஜனவரி 24-ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் பைனான்சியர் ஒருவர் மிஸ்கின் ஏற்கனவே ஒரு படத்திற்கு பைனான்ஸ் வாங்கி விட்டு அந்த படத்தை முடித்து கொடுக்காமலே சைக்கோ படத்தை இயக்கும் வேளையில் இறங்கி விட்டார்.
இதனால் சைக்கோ படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.
சைக்கோ படத்தின் டீஸர், ட்ரைலர், பாடல்கள் ஆகியவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருப்பதால் சைக்கோ படத்தின் வழக்கிற்கு தீர்ப்பு என்னவாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.