Murugadoss : சர்கார் கதை திருட்டு விவகாரம் குறித்து முருகதாஸ் அளித்த பேட்டி ஒன்றில் பேசி வருண் ராஜேந்தர் என்பவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
தளபதி விஜய் நடிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கியுள்ள படம் சர்கார். இந்த படம் வரும் தீபாவளிக்கு உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.
தற்போது சர்கார் படத்தின் கதை என்னுடையது என உதவி இயக்குனரான வருண் ராஜேந்தர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் முருகதாஸ் அளித்துள்ள பேட்டி ஒன்றில் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே இது என்னுடைய கதை என கூறுவது எவ்வளவு பெரிய முட்டாள் தனம்.
படத்தின் கதையை தெரிந்து கொள்வதற்காக செய்யும் திருட்டு தனம். இதையெல்லாம் நான் எதிர் கொண்டே ஆக வேண்டும். இல்லையென்றால் மேலும் பலர் இது என்னுடையது அது என்னுடையது என வரிசை கட்டி வந்து கொண்டே இருப்பார்கள் என கூறியுளளார்.
முருகதாஸின் இந்த பதிலை ரசிகர்கள் சரியான பதில் என கூறி வருகின்றனர்.