கத்தி மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட படங்களின் இரண்டாம் பாகம் குறித்து பேசுகிறார் முருகதாஸ்.

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படங்கள் தான் கத்தி மற்றும் துப்பாக்கி.

கத்தி திரைப்படம் விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படும் போது கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் எப்படி வாட்டர் பாட்டில் தண்ணீர் விற்பனை செய்கிறார்கள் என்பதை பேசும் படமாக அமைந்தது. துப்பாக்கி திரைப்படம் ஊருக்கு வரும் ராணுவ வீரர் ஊரில் நடக்கும் பிரச்சினைக்காக போராடும் படமாக அமைந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த படங்களில் இரண்டாம் பாகம் குறித்து இயக்குனர் முருகதாஸ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதாவது இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்றால் நமக்குள் ஒரு வட்டத்தை போட்டுக் கொண்டு இந்த கதை களத்தில் இருக்க வேண்டும். முதல் பாகம் வெற்றி என்பதால் இரண்டாம் பாகத்தை அதைவிட சிறப்பாக கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கும். ஆகையால் இரண்டாம் பாகங்களை இயக்க பயமாக இருக்கிறது. இருந்தாலும் துப்பாக்கி படத்தில் இரண்டாம் பாகத்தை இயக்கும் ஐடியா உள்ளது என தெரிவித்துள்ளார்.

இவருடைய இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.