MP Kanimozhi spearheads demonstration
MP Kanimozhi spearheads demonstration

சென்னை: சென்னையில் ரயில்வே அலுவலகம் முன்பு ரயில்வே பணி தேர்வில் இந்தி மொழிக்கு முக்கியத்துவம் தருவதை கண்டித்து திமுக எம்.பி கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

MP Kanimozhi spearheads demonstration – ரயில்வே பணி தேர்வில் இந்தி மொழிக்கு முக்கியத்துவம் தருவதை கண்டித்து சென்னையில் ரயில்வே அலுவலகம் முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் திமுக எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, கலாநிதி வீராசாமி, சண்முகம் பி.வில்சன் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் ஆகியோர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

ரயில்வேத்துறை நடத்தக் கூடிய துறைசார்ந்த போட்டித் தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுத அனுமதி இல்லை என்றும், ஆங்கிலம் மற்றும் இந்தியில் தேர்வு நடத்தப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதனை கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், திமுக சார்பில் எம்.பி.கனிமொழி தலைமையில் ரயில்வே பணி தேர்வில் இந்தி மொழிக்கு முக்கியத்துவம் தருவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை தென்னக ரயில்வே மேலாளர் அலுவலகத்திற்கு அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

ஆர்ப்பாட்டத்தில், “தமிழகத்தில் இந்தியை திணிப்பதற்கான பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது.

ஆனால் தமிழகத்தில் அதனை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்..! ” என மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை திமுகவினர் எழுப்பி வருகின்றனர்.

மேலும் ரயில்வே மேலாளரை நேரில் சந்தித்து இதற்கான கோரிக்கை மனுவையும் அளிக்க உள்ளனர்.

முன்னதாக, ரயில்வே துறையில் அலுவல் மொழியாக ஆங்கிலம் மற்றும் இந்தி இருக்க வேண்டும் என தென்னக ரயில்வே மேலாளர், ஊழியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். அந்த சமயம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டன அறிக்கை வெளியிட்டார்.

ஸ்டாலின் வேண்டுகோளுக்கு இணங்க நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி.தயாநிதி மாறன் ரயில்வே மேலாளரை நேரில் சென்று சந்தித்து கோரிக்கை வைத்தார்.

அவரின் வலியுறுத்தலின் பேரில் சுற்றறிக்கையானது திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மீண்டும் ரயில்வே நிர்வாகமானது, ரயில்வே துறை அதிகாரிகளுக்கு நடத்தும் போட்டித்தேர்வை ஆங்கிலம் மற்றும் இந்தியில் எழுத வேண்டும் என ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இதனால், இது கண்டனத்திற்குரிய செயல் என கூறி திமுக சார்பில் கனிமொழி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது