coimbatore

கோவையில் ஒரு பெண்ணும், அவரின் 5 வயது மகளும் மர்மமான முறையில் இறந்த கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஒண்டிப்புதூர் ஸ்ரீகாமாட்சி நகரில் தனது பெற்றோர், சகோதரர் மாதவன் மற்றும் தனது 5 வயது மகள் கார்குழலி ஆகியோருடன் வசித்து வருபர் வேதவள்ளி(41). இவரின் கணவர் அமெரிக்காவில் பணிபுரிந்த நிலையில் இறந்துவிட்டார்.

இந்நிலையில், கடந்த கடந்த 18ம் தேதி இரவு அவர்களின் வீட்டில் தகராறு நடக்கும் சப்தம் கேட்டுள்ளது. அதையடுத்து, 2 மணியளவில் சிறுமிக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி மாதவன் எதிர்வீட்டில் கார் கேட்டுள்ளார். அதன்பின் காலையில் வீடு திறக்கப்படவில்லை. சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

Murder

அவர்கள் வந்து கதவை தட்டிய போது கதவு திறக்கப்படவில்லை. எனவே, போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது வேதவள்ளி ஒரு அறையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். மேலும், சிறுமியை சோதித்த மருத்துவர்கள் அவள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். எனவே, போலீசார் சிறுமியின் உடலை பிரதே பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

வீட்டில் டிவி உள்ளிட சில பொருட்கள் உடைக்கப்பட்டிருந்தது. மாதவன் தலையில் ரத்தக்காயம் உள்ளது. வீட்டில் சில இடங்களில் ரத்தம் சிதறிக்கிடந்தது. எனவே, வேதவள்ளியின் பெற்றோர், தம்பி மாதவன் ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

தாயும், மகளும் மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.