விஜய் சேதுபதியின் ட்வீட்டுக்கு நச்சுனு ஒரு பதிலடி கொடுத்துள்ளார் இயக்குனர் மோகன் ஜி.
Mohan G Reply to Vijay Sethupathi : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி தற்போது சமூக வலைதளங்களில் எதை பதிவிட்டாலும் அது செய்தியாகி வருகிறது.
மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் கடவுள் மேல தான் இருப்பார், மனுஷனை மனுஷன் தான் காப்பாத்தணும் என பேசியது விவாதத்துக்கு உள்ளானது.
அதேபோல் விஜய்யால் விஜய் சேதுபதி கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டதாக வெளியான தகவல்களுக்கு போய் வேலை இருந்தா பாருங்கடா எனவும் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பசி என்னும் நோய்க்கு தடுப்பூசி இருந்தால் நன்றாக இருக்கும். ஓ மை கடவுளே என பதிவிட்டிருந்தார்.
பசி எடுக்கலனா இந்த உலகம் எப்படி இயங்கும்.. பசி தான் உங்களை உழைக்க சொல்லும், பசி தான் அடுத்தவர் மீது கருணையை உருவாக்கும், பசியை அழிக்கும் நாள் முதல் உலகம் அழிய தொடங்கும் நண்பா.. பதிவிட்டுள்ளார்.
பசி எடுக்கலனா இந்த உலகம் எப்படி இயங்கும்.. பசி தான் உங்களை உழைக்க சொல்லும், பசி தான் அடுத்தவர் மீது கருணையை உருவாக்கும், பசியை அழிக்கும் நாள் முதல் உலகம் அழிய தொடங்கும் நண்பா.. https://t.co/WreggQsRmk
— Mohan G 🔥❤️ (@mohandreamer) May 5, 2020