தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி மாமல்லபுரம் கடற்கரையில் செய்த ஒரு காரியம் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
Modi plogging plastics in beach viral video – சீன அதிபர் ஜின்பிங் – மோடியின் சந்திப்பிற்காக அவர்கள் இருவரும் நேற்று சென்னை வந்தனர். அதன்பின் நேற்றுமாலை மாமல்லபுரத்தில் இருவரும் ஒன்றாக சிற்பங்களை சுற்றிப்பார்த்தனர். அங்கு இரவு உணவு முடித்துவிட்டு ஜின்பிங் கிண்டி ஐ.டி.சி ஹோட்டலுக்கு திரும்பிவிட, மோடி மட்டும் மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கினார். அதையடுத்து இன்று அதிகாலை எழுத்து மாமல்லபுரம் கடற்கரையில் நடைப்பெயற்சி மேற்கொண்டார். கடல் அழகையும் பார்த்து ரசித்தார்.
அப்போது கடற்கரையில் ஏராளமான பிளாஸ்டிக்குகள் கிடந்தது. அதைக்கண்ட மோடி அவற்றை தனது கையால் பொறுக்கி சுத்தம் செய்தார். இது தொடர்பான வீடியோவை மோடியே தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், மாமல்லபுரம் கடற்கரையில் இருந்த பிளாஸ்டிக்குகளை அகற்றினேன். அதற்கு 30 நிமிடம் ஆனது. அதன்பின் அவற்றை ஹோட்டல் ஊழியர் ஜெயராஜிடம் கொடுத்தேன். பொது இடங்களை சுத்தமாக வைத்துக்கொள்வோம். ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்’ என பதிவிட்டுள்ளார்.
Plogging at a beach in Mamallapuram this morning. It lasted for over 30 minutes.
Also handed over my ‘collection’ to Jeyaraj, who is a part of the hotel staff.
Let us ensure our public places are clean and tidy!
Let us also ensure we remain fit and healthy. pic.twitter.com/qBHLTxtM9y
— Narendra Modi (@narendramodi) October 12, 2019