Modi Bold Speech :
டோக்கியோ: ஜப்பானில் பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பு தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
அதில் தீவிரவாதத்தை ஒடுக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் பிரிக்ஸ் நாடுகள் கூட்டத்தில் கலந்துகொண்ட மோடி, தீவிரவாதத்தை ஒடுக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
மக்கள் மீது பேரன்பு கொண்டவர் சூர்யா – உறியடி 2 இயக்குனர் விஜயகுமார் நெகிழ்ச்சி
மேலும் பருவநிலை மாற்றம், தீவிரவாதம் உலகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்றும் பிரிக்ஸ் நாடுகள் கூட்டத்தில் பேசினார்.
மேலும் தீவிரவாதம் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. தீவிரவாதத்தால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதோடு நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நல்லிணக்கமும் சீர்குலைகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் இந்திய பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஸீ ஜிம்பிங் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும் பிரேசில் அதிபர் போல்சொனாரோ, தென்னாப்பிரிக்கா அதிபர் ரமபோசா ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.