Modi against Vaiko – சென்னை: நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த மாட்டேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
நாளை சென்னை வண்டலூரில் அதிமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது., இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுகவின் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
எனவே டெல்லியில் இருந்து சென்னைக்கு தனி விமானம் மூலம் பிரதமர் மோடி வர இருக்கிறார்.
இவ்வாறு சென்னை வரும் பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வண்டலூர் பொதுக்கூட்டத்திற்கு வருவார் என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த மாட்டோம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மேலும் பிரதமர் மோடி அரசு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக வந்தால் நிச்சயம் கருப்புக் கொடி போராட்டம் நடத்துவோம் எனவும் கூறினார்.,
முன்னதாக, கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடிக்கு எதிராக வைகோ தலைமையில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதில் ஆர்ப்பாட்டம் நடத்திய வைகோவை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.