MNM Demands Minister Rajendra Balaji :
தூத்துக்குடி:இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்பது சரித்திர உண்மை என கமல் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அது சரித்திர உண்மை அல்ல தரித்திர உண்மை என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சர்ச்சை விமர்சனத்தை செய்துள்ளார்.
அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தில் கமல் கூறிய ‘இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து’ என்ற கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது.
கமலை விமர்சித்த சீரியல் நடிகர் – இது என்ன உலக நாயகனுக்கு வந்த சோதனை.!
ஆனால் தற்போது அதற்கு பதில் அளிப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருக்கும் விமர்சனம் அதைவிட பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் திருப்பரங்குன்றத்தில் நேற்று பேசிய கமல்ஹாசன் “நான் அரவக்குறிச்சியில் பேசியது சரித்திர உண்மை!! ” என கூறினார்.
இந்நிலையில் கமல் கூறியதை குறித்து தூத்துக்குடியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி அளித்தார். அதில் அவர் கூறுகையில் “இது சரித்திர உண்மை, சரித்திர உண்மை!” என கூறி சர்ச்சை விமர்சனத்தை எழுப்பியுள்ளார்.
மேலும் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கூறுவது சரித்திர உண்மையா, அதற்கு முன்பெல்லாம் நடைபெற்ற கசப்பான சம்பவங்கள் நிறைய உண்டு.
அந்த சம்பவங்கள் கசப்பான, மறைக்கப்பட வேண்டிய மன்னிக்கப்பட வேண்டிய சம்பவங்கள். அதை நாம் மீண்டும் பேசினால் மத நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கும், அப்படியிருக்கும் போது ஒரு நடிகர் இவ்வாறு பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறு கூறினார்.