MK.Stalin Bold Speech : Political News, Tamil nadu, Politics, BJP, DMK, ADMK, Latest Political News, MK.Stalin, udhayanithi Stalin

MK.Stalin Bold Speech :

சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் பிரச்சினைகளை மின்னஞ்சலில் அனுப்பினால் சட்டமன்றத்தில் திமுக குரல் எழுப்பும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற 28- ஆம் தேதி அன்று தொடங்கி, ஜூலை 30- ஆம் தேதி வரை நடக்கிறது.

இந்த கூட்டத்தில் ஒவ்வொரு துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற உள்ளது. இதில், தமிழகத்தில் நிலவும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு, வறட்சி, மின்வெட்டு உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளை எழுப்ப திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இதனால், கூட்டத்தில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும் என்று அனைவராலும் ஆவலோடு எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் நிலவும் பிரச்னைகளை பொதுமக்கள் தங்களது மின்னஞ்சலில் அனுப்பினால் அதை சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் எதிரொலிப்பார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கருணாநிதிக்கு 6 அடி இடம் தராதோருக்கு தமிழகத்தில் இடமா.! ஸ்டாலின் கேள்வி!

இதுதொடர்பாக திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறுகையில், “பஞ்சம் தொடங்கி வேலையில்லா திண்டாட்டம் வரை தமிழகத்தில் நிலவும் ஒவ்வொரு பேரவலமும் வரும் சட்டமன்ற கூட்டத்தில் விவாதிக்கப்படுவதை திமுக உறுதி செய்யும்.

மேலும் உடனடி கவனம் பெற வேண்டிய பிரச்னை என நீங்கள் கருதுவதை மின்னஞ்சலுக்கு அனுப்ப வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பொதுமக்கள் பிரச்னையை அனுப்ப மின்னஞ்சல் முகவரியும் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே பிரச்னை என நீங்கள் கருதுவதை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். இவ்வாறு டிவிட்டரில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எனவே பொதுமக்கள் அனைவரும் தங்களின் பிரச்சினைகளை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்..

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.