பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
MK Stalin About SSLC Exam : இந்தியாவில் தற்போது பரவி வரும் கொரானா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மறு தேதி குறிப்பிடாமல் விடுமுறை விடப்பட்டுள்ளன.
திருமணம் குறித்து நடிகர் பிரேம்ஜி எடுத்த அதிரடி முடிவு – அதிர்ச்சியில் குடும்பத்தினர்!
இந்த நிலையில் இந்த வைரஸ் தொற்றால் நடத்த முடியாமல் போன பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஜூன் 15ம் தேதி முதல் நடத்தி முடிக்க முடிவு செய்து அதற்கான பணிகளும் நடந்து வருகின்றன.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளும் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தற்போது இது குறித்து ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தற்போது என்ன அவசரம்?
முதல்வருக்கு ஏன் இந்த முரட்டு பிடிவாதம்? இது மாணவர்களின் உயிரோடு விளையாடும் அபாயகரமான ஆட்டம் என சாடியுள்ளார்.
தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகே தேர்வை நடத்த முடிவு எடுத்திருக்கலாம் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.