Hero Story Issue
ஹீரோ கதை திருட்டு விவகாரம் குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்து பல உண்மைகளை கூறியுள்ளார் பி. எஸ் மித்ரன்.

தமிழ் சினிமாவில் இரும்புத்திரை என்ற படத்தின் மூலமாக வெற்றி இயக்குனராக தடம் பதித்தவர் மித்ரன். இந்த படத்தை தொடர்ந்து சிவகார்திகேயனை வைத்து ஹீரோ என்ற பெயரில் சூப்பர் ஹீரோ படத்தை இயக்கினார்.

இப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் ஹீரோ முற்றிலும் ஒருவரின் கதை என எழுத்தாளர் சங்க தலைவர் பாக்கியராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சியை கொடுத்திருந்தார்.

இதனையடுத்து மித்ரன் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது நான் ஏற்கனவே என்னுடைய கதையை பதிவு செய்துள்ளேன். எனக்கு முன்பாக இன்னொருவர் பதிவு செய்திருக்கிறார் என்பதால் எப்படி இரண்டும் ஒரு கதையாகி விடும்?

ஒரே மாதிரியான சிந்தனைகளை அங்கீகரிக்க மறுக்காதீர்கள். எனக்கு எப்படி கதை, திரைக்கதை எழுதுவது என்று அச்சமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

நான் செய்தித்தாள்கள் மூலமாக தான் என்னுடைய படத்தின் கருவை எடுத்தேன், நான் மட்டுமில்லாமல் இன்னும் மூன்று பேர் இணைந்து தான் இந்த படத்தின் கதையை உருவாக்கினோம், அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.

நான் எதையும் கோர்ட்டில் சந்தித்து கொள்கிறேன் என பேசியுள்ளார். அவர் பேசிய முழு வீடியோ இதோ உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.