tution teacher
டியூசன் ஆசிரியரை அவரிடம் படிக்கும் மாணவன் பல முறை கத்தியால் குத்திய சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Minor boy snapped by knife and killed tuition teacher – மும்பை சிவாஜி நகரில் வசித்து வருபவர் ஆயிஷா அஸ்லம் ஹூசாய். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்துள்ள அவர் தனது மகனுடன் வசித்து வருகிறார். அந்த பகுதியில் வசிக்கும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு டியூசன் சொல்லிக் கொடுத்து வருகிறார்.

கடந்த 16ம் தேதி அவரிடம் படிக்கும் கோவந்தி பகுதியை சேர்ந்த 12 வயது மாணவன் தனது தாய் அவரிடம் பணம் கேட்டதாக கூறியுள்ளான். ஆனால், ஆசிரியை மறுத்துள்ளார். எனவே வீட்டிற்கு சென்ற அவனிடம் தாய் மீண்டும் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த சிறுவன் மீண்டும் ஆசிரியையிடம் சென்று பணம் கேட்டுள்ளான். ஆனால் மீண்டும் மறுத்த ஆசிரியை மற்ற மாணவர்கள் முன்பு அவனை திட்டியதாக தெரிகிறது.

கள்ளக்காதலனுடன் காட்டுக்குள் சென்ற பெண் ; சுற்றிவளைத்த 6 பேர் : சேலத்தில் அதிர்ச்சி

இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்து வந்து ஆசிரியையின் வயிறு உள்ளிட்ட பகுதிகளில் கத்தியால் பலமுறை குத்தியுள்ளான். எனவே, வீட்டிலிருந்த அலாரத்தை அவர் ஒலிக்க செய்தார். எனவே, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறிவிட்டனர்.

அதே சமயம், என் மகன் நன்றாக படிப்பவன். ஆசிரியையிடம் பணம் கேட்டு நாங்கள் அனுப்பவில்லை என சிறுவனின் தந்தை மறுத்துள்ளார். ஒருபக்கம், ரூ.1000 பணம் கொடுத்து அந்த ஆசிரியை சிலர் கொலை செய்ய சொன்னதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. போலீசாரின் விசாரணைக்கு பின்னரே உண்மை வெளியே வரும். சிறுவனுக்கு 12 வயது என்பதால் சிறுவன் சீர்சிருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட இருக்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது.