ஏற்கனவே சில அதிமுக அமைச்சர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருந்த நிலையில் தற்போது அமைச்சர் செல்லூர் ராஜுவிற்கும் கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Minister Sellur Raju Tested Corona Positive : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு வரும் எண்ணிக்கை எட்டு லட்சத்தை நெருங்குகிறது.
தமிழகத்தில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.5 லட்சத்தை நெருங்கி வருகிறது. நாளுக்கு நாள் மக்கள் பாதிக்கப்பட்டு வருவது போல அரசியல் தலைவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
ஏற்கனவே திமுகவைச் சேர்ந்த எம்எல்ஏ அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து மேலும் இரண்டு திமுக எம்எல்ஏக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல அதிமுக எம்எல்ஏ க்களும் சிலர் பாதிப்படைந்துள்ளனர். மேலும் உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன், மின்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி இருந்தது.
இவர்களைத் தொடர்ந்து தற்போது கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.
இதனால் அவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்களின் மனைவிக்கு கொரோனா தொற்று உதவி செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.