Minister Kamaraj Speech :
சென்னை: ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர உள்ளது. இத்திட்டத்தால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்று அமைச்சர் காமராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை விரைவில் மத்திய அரசு கொண்டுவர உள்ளது. இந்நிலையில் இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த திட்டத்தை தமிழக அரசியல் கட்சிகளும், எதிர்த்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது’ என்று அமைச்சர் காமராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
இனி இஷ்டத்துக்கு டைட்டில் வைக்க முடியாது, வெளியானது மத்திய அரசின் அதிரடி உத்தரவு!
மேலும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டுவர இருக்கிறது என கூறினார். மேலும் இதுதொடர்பாக டெல்லியில் ஏற்கனவே உணவுத்துறை அமைச்சர் தலைமையில் கூட்டம் நடந்துள்ளது.
மேலும் இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்தால் தமிழகத்தில் பொதுவினியோக திட்டத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டது.
ரேஷன் கடைகளுக்கு தேவையான அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் 3 மாதத்துக்கு கையிருப்பு உள்ளது என கூறினார். எனவே வெளி மாநிலத்தவர்களுக்கு இங்குள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கினாலும் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் வராது என கூறினார்.
மேலும் மற்ற மாநிலத்தவர்களுக்கு கொடுக்கும் பொருட்களை மத்திய அரசு நமக்கு தந்து விடும், எனவே மத்திய அரசு தரும் பொருட்களையே ரேஷன் கடைகளில் வினியோகம் செய்கிறோம்.
இத்திட்டத்தால், தமிழகத்தில் இலவச ரேஷன் அரிசி வழங்கும் திட்டத்திலும் இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்துள்ளார். இதே போன்று, பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி-சேலை மற்றும் பொங்கல் பரிசு போன்ற பொருட்கள் வழங்கும் வினியோகத்திலும் எந்த தடங்கலும் ஏற்படாது என தெரிவித்துள்ளார்.