Minister Jayakumar :
சென்னை: தமிழகம் முழுவதும் மழை பெய்ய வேண்டி, இறைவனை வேண்டி யாகம் நடத்தப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயிலில் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் மழை வேண்டி இறைவனுக்கு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
இதில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “தமிழர்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு மரம் நட வேண்டும் என்றும், ஒவ்வொருவரும் ஒரு மரம் நட்டால் அது 100 பேருக்கு ஆக்சிஜனை தரும்” என்றும் அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயகுமார், ‘யாகம் நடத்தினால் மழை வரும் என்பது ஒரு நம்பிக்கையே’ என்று தெரிவித்தார்.
மேலும் வீராணம் திட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்ததால் குடிநீர் பிரச்னையை சமாளிக்க முடிவதாக தெரிவித்த அவர், மழைநீர் சேகரிப்பு திட்டத்தை விரிவுபடுத்தி அதனை கட்டாயப்படுத்துவோம் என்று தெரிவித்தார்.
மேலும் இயற்கை வளங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நமது கடமை என்றும் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
தவறி விட்ட பெற்றோர்களுக்கோ, கணவருக்கோ, பெண்கள் திதி கொடுக்கலாமா?
அதனை தொடர்ந்து தங்க தமிழ்ச்செல்வன் அதிமுக வருகை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம் என்றும், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தாரை தவிர வேறு யார் அதிமுகவிற்கு வந்தாலும் வரவேற்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்’ .
மேலும் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை அதன் கொள்கை அடிப்படையில் அதிமுக ஆதரவு அளிப்பதாகவும், நடைமுறை சிக்கல்களை தீர்த்த பிறகு அதனை அமல்படுத்துவது குறித்து அதிமுகவினர் அதனை ஆலோசனை செய்வோம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்..