jayakumar
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பூம்பூம் மாட்டிடம் ஆசி பெற்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.

Minister jayakumar got blessing from cow – அமைச்சர் ஜெயக்குமாரின் வீடு பட்டினப்பாக்கத்தில் உள்ளது. நேற்று இரவு இவர் வீடு அமைந்துள்ள தெருவில் ஒரு பூம்பூம் மாட்டுக்காரர் சென்று கொண்டிருந்தார். இதைக்கண்ட அவர் வீட்டிலிருந்து வெளியே வந்த அவர் பூம்பூம் மாட்டிடம் ஆசிபெற்றார்.

Jayakumar Speech

இதுபற்றி கருத்து தெரிவித்த ஜெயக்குமார் ‘பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தாண்டி, டும் டும் மேளந்தட்டி சேதி சொன்னான்டி.. என்பது அந்தக்கால இளசுகளின் ரிங்டோன். இன்றோ, நமது பண்பாட்டு கூறுகளை, பாரம்பரிய அம்சங்களை கேலியாக பார்க்கும் மனோபாவம் நிறைய பேரிடம் உள்ளது.

ரசிகரின் செல்போனை வாங்கி செல்பி எடுக்கும் தல அஜித் – வைரல் வீடியோ!

ஆனால் பல ஆண்டுகளுக்குப் பிறகு பூம் பூம் மாட்டுக்காரர் ஒருவரை நேரில் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மாட்டின் தலையசைப்பும், பூம் பூம் மாட்டுக்காரரின் பேச்சும் என்னுள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தோண்டி எடுத்து கீழடி நாகரீகம் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் அதேவேளையில், நாம் இத்தகைய பூம் பூம் மாட்டுக்காரன் போன்றவர்களை மறந்து விடக்கூடாது. இவர்களை காப்பதும் ஒன்றுதான், நமது நாகரீகத்தை காப்பதும் ஒன்றுதான்’ என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளர்.