இறந்து போன தன்னுடைய கணவனை பற்றி உருக்கமாக பதிவிட்டுள்ளார் சிரஞ்சீவி சாராவின் மனைவி மேக்னா ராஜ்.
Meghana Raj About Chiranjeevi : தமிழ் சினிமாவில் காதல் சொல்ல வந்தேன் என்ற படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் மேக்னா ராஜ். இவர் கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி சாரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி சில வருடங்களே ஆகிய நிலையில் தற்போது 4 மாத கர்ப்பமாக இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த வாரம் சிரஞ்சீவி சாரா மாரடைப்பால் உயிரிழந்தார்.
இவருடைய மரணம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. நான்கு மாத கர்ப்பமாக இருக்கும் மேக்னா ராஜ்க்கு வாழ்த்துக் கூறுவதோ அல்லது அவருடையகணவர் இழப்பிற்கு இரங்கல் தெரிவித்தார் என தெரியாமல் பிரபலங்கள் வருத்தம் அடைந்தனர்.
தற்போது மேக்னாராஜ் தன்னுடைய கணவர் பற்றி உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில்
நீங்கள் என் நண்பர், என் காதலன், என் பங்குதாரர், என் குழந்தை, என் நம்பிக்கை, என் கணவர் என்பதைைவட நீ என் ஆன்மாவின் ஒரு பகுதி.
நீங்கள் இல்லாத ஒவ்வொரு நிமிடமும் என் மனம் சோகம் அடைந்து உள்ளது. நான் பலவீனப்படும் போதெல்லாம் எனக்கு பாதுகாவலனாக இருந்தது நீங்கள் தான் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
மேக்னா ராஜின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் ஆறுதல் கூறி உள்ளனர்.