Meera Mitun Vs Srilanka Nazir Hasan
Meera Mitun Vs Srilanka Nazir Hasan

சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதற்காக தனக்கு உதவுமாறு கேட்ட இளைஞரிடம் ஒரு லட்சம் ரூபாய் கேட்டுள்ளார் மீரா மிதுன் என இலங்கை பத்திரிகை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Meera Mitun Vs Srilanka Nazir Hasan : தமிழ் சினிமாவின் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து தளபதி விஜய் மற்றும் சூர்யாவைப் பற்றி விமர்சனம் செய்து வருகிறார்.

பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இலங்கையைச் சேர்ந்த நாசிர் ஹாசன் என்ற இளைஞர் மீரா மிதுனுக்கு அறிவுரை வழங்கி ஒரு பதிவை பதிவிடுவது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்தப் பதிவு விஜய் மற்றும் சூர்யா போன்றோரை விமர்சனம் செய்வதை விட்டுவிட்டு மக்களுக்கு நல்லது செய்யுங்கள், சமூகத்தில் நடைபெறும் குற்றங்கள், கற்பழிப்பு போன்றவைகளுக்கு எதிர்ப்பு தெரிவியுங்கள்.

பொருளாதாரம், தொழில், வேலை வாய்ப்பு உயர வேண்டும் – சுதந்திர தினத்தை முன்னிட்டு PT.செல்வகுமார் வேண்டுக்கோள்

மக்கள் மனதில் நிச்சயம் இடம் கிடைக்கும். அனைவரும் ஆதரவு கொடுப்பார்கள். நல்ல விஷயங்களுக்காக சமூக வலை தளத்தை பயன்படுத்துங்கள் என கூறியுள்ளார்.

மேலும் அவதூறாக பேசியதற்காக விஜய் மற்றும் சூர்யாவிடம் மன்னிப்பு கேளுங்கள். பிறருடைய மனதைப் புண்படுத்தும் வகையில் கீழ்த்தரமான பதிவுகளை பதிவிடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

நாசிர் ஹாசனின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இவரின் இந்த பதிவிற்கு சினிமா இயக்குனர்கள் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இவர் ஒரு மாதத்திற்கு முன்னதாக முகநூல் பக்கத்தில் இராமனுடன் நண்பராகி உள்ளார். அப்போது அவரிடம் நான் ஒரு கதையை உருவாக்கி வைத்துள்ளேன். நான் படம் இயக்குவதற்கு எனக்கு உதவுங்கள். என்னுடைய படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். அவருக்கு என்னை அறிமுகப்படுத்துங்கள் என உதவி கேட்டுள்ளார்.

அதற்கு மீராமிதுன் நிச்சயம் முடியும், ஆனால் ஒரு ட்விட்டர் பதிவுக்கு ரூபாய் ஒரு லட்சம் கொடு என கேட்டுள்ளார். என்னுடைய கல்விக்காகவே நிறைய செலவு செய்து விட்டோம் தற்போது என்னால் பணம் கொடுக்க முடியாது.

நான் படம் இயக்கி வெற்றி கண்டவுடன் உங்களுக்கு பணம் தருகிறேன் என கூறியுள்ளார். அதற்கு மீரா மிதுன் அப்படி செய்வது மிகவும் கஷ்டம். எனக் கூறுகிறார் அதாவது பணமில்லாமல் சிபாரிசு செய்ய முடியாது என தெரிவித்துள்ளார் எனவும் அந்த இணையதள பத்திரிகை செய்தியில் பதிவிடப்பட்டுள்ளது.

மீரா மிதுன் இந்தச் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

https://fastnews2400.blogspot.com/2020/08/blog-post_63.html?m=1