இதையெல்லாம் தட்டிக்கேட்க மாட்டிங்களா முதல்வரே என புகைப்படம் ஒன்றை வெளியிட்டு கேள்வி கேட்டுள்ளார் மீரா மிதுன்.
Meera Mitun Request to CM : தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். சமூக வலைதளப் பக்கங்களில் எப்போதும் எதையாவது பதிவிட்டு சர்ச்சைக்கு தொடர்ந்து ஆளாகி வருபவர்.
இந்த நிலையில் தற்போது இவர் தன் புகைப்படத்தை பயன்படுத்தி ரசிகர் ஒருவர் மார்பிங் செய்து ஆபாசமாக கமெண்ட் அடித்ததை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வெளியிட்டு எடப்பாடி பழனிச்சாமிக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் டேக் செய்துள்ளார்.
மேலும் இந்த பதிவை நான் நடிகை என்பதால் இதுபோன்ற நிறைய சந்தித்து வருகின்றேன். இவற்றை தடுக்க நடவடிக்கை எடுங்கள். இதையெல்லாம் தட்டிக்கேட்க மாட்டீங்களா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்களில் இப்படி ட்வீட் போட்டு விளம்பரம் தேடித் தொகுத்து போலீஸ்ல புகார் கொடு எனவும் திட்டி வருகின்றனர்.