சூர்யா, கார்த்தி ஆகியோரின் குடும்பத்தை கண்டபடி விளாசியுள்ளார் மீரா மிதுன்.
Meera Mitun Blasted Suriya : தமிழ் சினிமாவின் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். சமீபகாலமாக பெரிய நடிகர் நடிகைகளை டார்கெட் செய்து அவர்கள் குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
நடிகர் விஜய் மற்றும் ரஜினிகாந்த் சூப்பர் மாடலான தன்னை தமிழ் திரையுலகில் வளரவிடக்கூடாது என எனக்கு எதிராக வேலை செய்து வருவதாக குற்றம் சாட்டியிருந்தார்.
அதன் பின்னர் நயன்தாரா தன்னுடைய ஸ்கைலைட் காபி செய்வதாக பதிவிட்டு இருந்தார். இதில் திரிஷா ஐஸ்வர்யாராய்க்கு அவர்களின் தான் கொடுக்கும் போது அப்படியே கொடுப்பதாக கூறி அவர்களையும் வம்பிழுத்தார்.
அதுமட்டுமல்லாமல் த்ரிஷாவால் என்னை அறிந்தால் படத்தில் நான் நடித்திருந்த காட்சிகள் நீக்கப்பட்டதாகவும் பேட்டை படத்தில் வாய்ப்பு பறி போனதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது இவர் சூர்யா மற்றும் சூர்யாவின் குடும்பத்தை விமர்சனம் செய்து உள்ளார்.
அதாவது சூர்யாவும் சூர்யாவின் குடும்பம் வருத்தங்களையும் படம் ரிலீசாகும் போது தான் எதைப்பற்றியாவது பேசுவார்கள். பொன்மகள் வந்தாள் படத்தின் ரிலீஸின்போது ஜோதிகா இந்துக் கோவில்களை பற்றி தவறான முறையில் பேசினார்.
தற்போது தங்களின் படங்கள் ரிலீஸாக உள்ள நிலையில் சூர்யாவும் கார்த்தியும் EIA-விற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என கூறி உள்ளார்.
மேலும் அவர் இது குறித்து ஆடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இவை சமூக வலைதளங்களில் வைரல் ஆகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.