இப்போ உங்க விஜயா சாப்பாடு போடப் போறாரு என விஜய் ரசிகர் பாலாவின் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டுள்ளார் மீரா மிதுன்.
Meera Mitun About Vijay Fan Death : தமிழ் சினிமாவில முன்னணி நடிகரான தளபதி விஜய் தனக்கென உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் என்பது அனைவரும் அறிந்ததே.
கள்ளக்குறிச்சி சேர்ந்த விஜய் ரசிகரான பாலா என்ற இளைஞர் குடும்ப பிரச்சின காரணமாக மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவருடைய மரணம் விஜய் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தளபதி விஜய் தொலைபேசி வழியாக பாலாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
திரையுலகப் பிரபலங்கள் பலரும் பாலாவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை மீரா மிதுன் இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
திரையுலக பிரபலங்களை திரையில் மட்டும் கொண்டாடுங்க, நிஜ வாழ்க்கையிலும் 24 மணி நேரமும் அவர்களை பற்றி கோஷமிட்டு கொண்டே இருந்தால் அனைவரும் வெறுக்க தான் செய்வார்கள். இப்போ உங்க விஜயா வந்து குடும்பத்துக்கு சாப்பாடு போட போறாரு? #RIPBala என பதிவிட்டுள்ளார்.
மீரா மிதுன் இந்தப்பதிவு ரசிகர்களின் கோபத்தை மேலும் தூண்டியுள்ளது. இதை ரசிகர்கள் பலரும் மீராவை எச்சரித்து வருகின்றனர்.
ரசிகர்கள் பலரும் அவர் விஜய்க்காக தற்கொலை செய்து கொள்ளவில்லை. குடும்ப பிரச்சினைக்காக தான் தற்கொலை செய்து கொண்டார். இவருடைய இறப்பை வைத்து விளம்பரம் தேடாத என விமர்சனம் செய்து வருகின்றனர்.