மீரா தர்ஷனிடம் காதலை சொன்னது வீட்டில் வந்து பெண் கேட்க சொன்னது எல்லாம் எதற்கு என்பது தற்போது தெள்ள தெளிவாகியுள்ளது.
Meera Mithun Love Plan : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரத்தில் மீரா மிதுன் தர்ஷனிடம் தன்னுடைய காதலை சொல்லி வீட்டில் வந்து பெண் கேட்குமாறு கூறியுள்ளார். அதற்கு தர்ஷன் எனக்கு ஆள் இருக்கு என மீராவை தவிர்த்து விட்டார்.
ஏன் இந்த பஞ்சாயத்து கமலிடம் வந்த பிறகு கூட தர்ஷன் மீது பழியை போட்டு தன்னை காப்பாற்றிக்க தான் பார்த்தார். என்னிடம் எதுக்கு அப்போ பேசுங்க, ஏன் ட்ரெஸ்ஸை இப்படி போடு அப்படி போடுன்னு சொன்ன என்றெல்லாம் கேட்டார்.
ஆனால் அவர் தர்ஷனிடம் காதலை சொன்னதுக்கு பின்னாடி ஒரு பெரிய பிளான் இருப்பதை நெட்டிசன்கள் கண்டு பிடித்துள்ளனர்.
ஆம், சமீபத்தில் மீரா நான் எனக்கு டப் போட்டியாளராக நினைப்பது தர்ஷன் தான் எனவும் சேரன் எல்லாம் எனக்கு ஒரு ஆளே கிடையாது எனவும் குறிப்பிட்டு பேசி இருந்தார்.
மீரா மிதுனின் இந்த பேச்சில் அவர் சிக்கி கொண்டுள்ளார், தர்ஷனை காதலிப்பதாக கூறி அவரை எப்படியாவது வெளியேற்றி விட தான் அவர் இவ்வாறு செய்திருப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்ட தொடங்கியுள்ளனர்.