உலகம் முழுவதும் பிரபலமாகி வரும் மீ டூ என்ற அமைப்பில் பிரபலங்கள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை பற்றி கூறி வருகின்றனர். நேற்று கன்னட நடிகையான ஸ்ருதி ஹரிஹரன் அர்ஜுன் மீது பாலியல் குற்றச்சாட்டைப் பதிவு செய்திருந்தார்.
இதனையடுத்து தற்போது இளம் பெண் ஒருவர் சமூகவலைதளத்தில் பிரபல நடிகரான பிரசாந்தின் தந்தையும் இயக்குனருமான தியாகராஜன் மீது பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார்.
அந்த பதிவில் தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் கதாநாயகனாக நடித்திருந்த படம் பொன்னர் சங்கர். இந்த படத்தில் நான் போட்டோகிராபராக பணிபுரிந்து இருந்தேன். அப்போது இயக்குனர் தியாகராஜன் ஒரு நாள் தன்னிடம் வந்து தாய்லாந்து நாட்டின் அழகிய பெண்கள் தனக்கு மசாஜ் செய்ததாகவும அவர்களுடன் உல்லாசமாக இருந்ததாகவும் கூறி ஒரு சில புகைப்படங்களை காட்டினார்.
அதன் பின்னர் நள்ளிரவில் நான் தங்கியிருந்த அறையின் கதவை தட்டினார். இதனால் பயந்து போய் இரவு முழுவதும் நான் தூங்கவே இல்லை என பதிவு செய்துள்ளார்.