மாஸ்டர் படத்தில் இருந்து பிரிட்டோ விலகி கொண்டதாகவும் தற்போதைய தயாரிப்பாளர் யார் என்பது பற்றியும் தகவல்கள் கசிந்துள்ளன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க பிரிட்டோ தயாரித்து வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் தற்போது பத்திரிகையாளர் சிலர் வீடியோ ஒன்றில் இந்த படத்தில் ஆரம்பத்திலேயே பிரிட்டோ அவருக்கான பங்கை பெற்று கொண்டு படத்தில் இருந்து விலகி கொண்டதாகவும் தற்போது இப்படத்தின் லைன் ப்ரொடியூசராக இருந்து வந்த லலித் குமார் தான் தயாரிப்பாளர் எனவும் கூறியுள்ளனர்.
ஆனால் படக்குழு இன்னமும் போஸ்டரில் பிரிட்டோவையே தயாரிப்பாளராக காட்டி வருகின்றனர்,. லலித் குமாரை லைன் ப்ரொடியூசராகவே வைத்து வருகின்றனர் என பேசியுள்ளனர். இதனால் உண்மையில் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது ஒரு புறம் இருக்க மாஸ்டர் படத்தின் அனைத்து அப்டேட்களையும் xb பிலிம்ஸ் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு கொண்டு தான் இருக்கிறது. எனவே இது பொய்யாகவும் இருக்கலாம். படக்குழு சரியான விளக்கம் கொடுத்தால் உண்மை வெளிச்சத்துக்கு வரும்.