டிக்டாக் வீடியோவை தவிர்க்குமாறு கணவன் வலியுறுத்தியதால் நகைகளை எடுத்துக்கொண்டு இளம்பெண் தலைமறைவான சம்பவம் தேவகோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Married girl run away from home for tiktok friend – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர் வனிதா. இவருக்கும் ஆரோக்கிய லியோ என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது.
திருமணம் ஆகி சில மாதங்களில் வேலை நிமித்தமாக லியோ சிங்கப்பூருக்கு சென்றுவிட்டார். வீட்டில் தனியாக இருந்த வனிதாவின் கவனம் டிக்டாக் வீடியோ மீது திரும்பியது.
அதைத் தொடர்ந்து திருவாரூரை சேர்ந்த அபி என்கிற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. இவர்கள் இருவரும் சேர்ந்து ஏராளமான டிக்டாக் வீடியோவை எடுத்தனர்.
மேலும், சிங்கப்பூரிலிருந்து கணவன் அனுப்பும் பணத்தை அபியுடன் சேர்ந்து வனிதா செலவு செய்ததாக தெரிகிறது.
எனவே, அபியுடனான நட்பை துண்டிக்கும்படியும், டிக்டாக் வீடியோ போடுவதை கை விடும்படியும் வனிதாவை லியோ கண்டித்துள்ளார். ஆனால், அவர் திருந்தவில்லை.
எனவே, சமீபத்தில் லியோ சிங்கப்பூரில் இருந்து ஊருக்கு வந்துள்ளார். அப்போது வனிதா தனது வலது கையில் அபியின் உருவத்தை பச்சை குத்தி வைத்திருந்ததை கண்டு அதிர்ந்து போனார்.
மேலும், எவ்வளவு அறிவுரை கூறியும் அபியுடனான நட்பை துண்டிக்க மாட்டேன என்பதில் வனிதா உறுதியாக இருந்துள்ளார்.
பி.வி.சிந்துவை கடத்தி திருமணம் செய்வேன் – கலெக்டரிடம் 70 வயது முதியவர் மனு
எனவே, இதுபற்றி வனிதாவின் பெற்றொரிடம் கூறிய லியோ, அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைக்கும் படி அவர்களின் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
அங்கு அனைவரும் அபிக்கும் அறிவுரை கூறியுள்ளனர். அதன்பின், வீட்டிலிருந்து அக்காவின் 25 சவரன் நகைகளை எடுத்துக்கொண்டு வனிதா மாயமானார்.
எனவே, காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வனிதாவை தேடி வருகின்றனர்.
டிக்டாக் வீடியோவால் பல பெண்களின் வாழ்க்கை சீரழிந்து வருவது குறிப்பிடத்தக்கது.