Marina Beach in Nivar Cyclone

மெரினா பீச் பகுதி முழுவதும் நீரால் நிரம்பியுள்ள வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி சென்னை வாசிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

Marina Beach in Nivar Cyclone : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயல் இன்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரி இடையே கரையைக் கடக்க உள்ளது.

இதனால் சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

அதிலும் குறிப்பாக சென்னையில் பல்வேறு இடங்களில் பெய்துவரும் மிக கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் ஆறுபோல் ஓடுகிறது.

மெரினா கடற்கரை பகுதிகள் முழுவதும் மழை நீரால் சூழப்பட்ட கடல் போல் காட்சியளிக்கிறது. சென்னைவாசிகள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மழை நீரால் சாலைகள் எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட சென்னையின் முக்கிய நீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும் தமிழக அரசு தமிழக மக்களை பாதுகாக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் பாதிப்புக்குள்ளாகும் மாவட்டங்களில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டு உள்ளன. புயல் முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் இந்த முகாம்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.