தீடீரென தமிழக தேர்தல் போட்டியில் இருந்து விலகிக் கொண்டுள்ளார் பிரபல நடிகரான மன்சூர் அலிகான்.
Mansoor Alikhan Decision on TN Election 2021 : தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தமிழக அரசியலில் பெரும் சக்தியாக இருந்து வந்த ஜெயலலிதா, கருணாநிதி இவர்கள் இருவரின் மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் நடைபைறும் முதல் தேர்தல் இது தான்.
இதன் காரணமாக நடிகர்களும் தேர்தலில் போட்டியிட களமிறங்கியுள்ளனர். தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக வலம் வந்த மன்சூர் அலிகான் அவர்களும் தேர்தலில் போட்டியிட இருந்தார்.
ஆனால் அவர் தொகுதியில் ஓட்டு சேகரிக்க சென்ற போதெல்லாம் மக்கள் யாரிடம் காசு வாங்கிக்கொண்டு தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என கேட்டுக் கொண்டே இருந்துள்ளனர். இதனால் மனமுடைந்த மன்சூரலிகான் இதன் காரணமாக தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்கிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.