Mansoor Alikhan Admitted in Hospital

நடிகர் மன்சூர் அலிகான் அவசரஅவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Mansoor Alikhan Admitted in Hospital : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் மன்சூர் அலிகான். பல நடிகர்களுக்கு வில்லனாக நடித்துள்ள இவர் தொடர்ந்து பல்வேறு நடித்து வந்தார். சமீபகாலமாக படங்கள் பெரிய அளவில் நடிக்கவில்லை. ஆனால் கொரோனா என்று ஒன்றுமே இல்லை. அரசாங்கம் நாடகமாடுகிறது என தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வந்தார். நடிகர் விவேக் கூட கொரனோ தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதால் தான் இறந்து போனார் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனால் இவர் கொரானா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்புவதாக நீதிமன்றம் 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. இந்த நிலையில் தற்போது இவர் உடல்நலக் குறைவால் அமைந்தகரை பில்ரோத் மரு‌த்துவமனை அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிட்னியில் பெரிய சைஸ் கல் அடை‌ப்பு ஏற்பட்டு மிகுந்த அவதிப்பட, உடனடியாக ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். கொரோனா டெஸ்ட் உட்பட அனைத்து பரிசோதனைகளும் நடைபெற்று, அறுவை சி‌கி‌ச்சைக்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.