சுறா படத்தில் ஏன் நடித்த என இயக்குனர் ஒருவர் கேட்க நொந்து போயுள்ளார் தளபதி விஜய்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் சுறா. இவரின் 50-வது படம் என்பதால் இந்த படத்திற்கு எக்கசக்க எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் இப்படம் தோல்வியை தழுவியது அனைவர்க்கும் பெரும் அதிர்ச்சி தான், விஜயே இப்படியொரு தோல்வியை எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.
இந்நிலையில் தற்போது இயக்குனரும் நடிகருமான மனோ பாலா பேட்டி ஒன்றில் விஜயிடம் நேரடியாக சுறா படத்தில் ஏன் நடித்த என கேட்டதாகவும் அதற்கு அவர் கடல், ஓப்பனிங் என இயக்குனர் பெரிய அளவில் கதை அதை நம்பி ஏமார்ந்து விட்டதாகவும் கூறி வருத்தப்பட்டார் எனவும் கூறியுள்ளார்.
ஆனால் சுறாவின் தோல்விக்கு பிறகு விஜயின் எழுச்சியை நிச்சயம் வேற லெவல் என்று தான் சொல்ல வேண்டும்.