தமிழ் சினிமாவில் சிம்பு, ஜோதிகா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருந்த படம் மன்மதன். ஏ.ஜே.முருகன் இயக்கத்தில் உருவாகி இருந்த இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக இயக்குனர் ஏ.ஜே,முருகன் பிரபல பத்திரிக்கைக்கு அளித்திருந்த பேட்டியில் கூறியுள்ளார்.

இந்த படம் குறித்து அவர் கூறியதாவது விரைவில் மன்மதன் 2 படம் தொடங்க உள்ளது. மேலும் இப்படத்தை தயாரிப்பாளர் சரவணன் அவர்கள் தயாரிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார். ஹீரோ சிம்பு தானா? என கேட்டதற்கு அதை இன்னும் கன்பார்ம் செய்யவில்லை எனவும் கூறியுள்ளார்.