manjari phadnis
தன்னை இயக்குனர்கள் படுக்கைக்கு அழைத்தே வாழ்க்கையை பாழாக்கி விட்டதாக நடிகை ஒருவர் கூறியுள்ளது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திரையுலகில் உள்ள நடிகைகள் பலர் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மீது பாலியல் குற்றசாட்டுகளை கூறி அடிக்கடி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதுவரை பல நடிகைகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில் தற்போது தமிழில் முத்திரை, தெலுங்குவில் சக்தி, ஹிந்தியில் சில படங்களில் நடித்து பிரபலமான மஞ்சரி பட்நிஸ் அதிர்ச்சிகர பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

அவர் தொடர்ந்து நடிக்காமல் போனதற்கான காரணம் என்ன என்று கேட்டதற்கு சக்தி படத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினேன்.

ஆனால் பெரும்பாலான இயக்குனர்கள் படுக்கையை பகிர்ந்தால் தான் வாய்ப்பு கிடைக்கும் என கூறினர். இதனால் மனமுடைந்த நான் சினிமாவை விட்டே விலகி கொண்டேன் என கூறியுள்ளார்.

மஞ்சரி பட்நிஸ் படுக்கைக்கு அழைத்த இயக்குனர்கள் யார் என்பதெல்லாம் அவர் கூறவில்லை.

Manjari-Phadnis

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.