Maniratnam’s next film :
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் மணிரத்னம். இவர் தன்னோட கனவு படமான பொன்னியின் செல்வன உருவாக்க தயாராகிட்டு வர்றாரு.
கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஷ்வர்யா ராய்னு இந்திய அளவில இருந்து பல நடிகர்கள் இந்த படத்தில இருக்காங்க.
இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் இப்போ தீவிரமா நடந்திட்டு வர்ற நிலையில இதுக்கிடையில தன்னோட உதவியாளர் தனசேகர் இயக்கத்தில ஒரு படத்த மணிரத்னம் கதை, வசனம் எழுதி தயாரிச்சிட்டு வர்றாரு.
கடாரம் கொண்டான் படத்தில் இணைந்த இன்னொரு பெரிய பிரபலம் – வெளிவந்த வீடியோ உள்ளே!
தொடர்ந்து தன்னோட படங்களுக்கு கவித்தமா பேர் வெக்கிற மணிரத்னம் இந்த படத்துக்கு வானம் கொட்டட்டும்னு பேர் வெச்சிருக்காரு.
இந்த படத்தில விக்ரம் பிரபு நாயகனா நடிக்கிறாரு. குடும்ப உறவுகள மையப்படுத்தி உருவாகுற இந்த படத்தில விக்ரம் பிரபுவோட சகோதரியா ஐஷ்வர்யா ராஜேஷ் நடிக்க மடோனா செபாஸ்டின் நாயகியா நடிக்கவிருக்காங்க.
இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை இறுதியில் துவங்கும் என தற்போது தகவல் கசிந்துள்ளது.