Maniratnam in Ponniyin Selvan Secrets : தமிழ் சினிமாவில் இயக்குனர்களின் ஜாம்பவானாக இருக்கும் மணிரத்னம் தனது நீண்ட நாள் கனவாக கல்கி எழுதிய இலக்கிய காவியமான பொன்னியின் செல்வன் என்ற நாவலை திரைப்படமாக எடுக்க உள்ளார்.
இந்த படமானது தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் உருவாக்கப்பட உள்ளது. இந்தப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக் மட்டுமல்லாமல் ஹிந்தி மொழி முன்னணி திரைப்பிரபலங்கள் இணைந்து நடிக்கும் வரலாற்று சார்ந்த திரைப்படம்.
இப்படத்திற்கு இயக்க, ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ஒளிப்பதிவில், கவிப்பேரரசு வைரமுத்து-வின் பாடல் வரிகளில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.
பிரபல நடிகைக்கு கற்பழிப்பு மிரட்டல்! ஆன்லைனில் புகார்!
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி, அருள்மொழிவர்ம கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி, சுந்தரசோழன் கதாபாத்திரத்தில் அமிதாப்பச்சன்,
ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரம், குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ், நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய், பழுவேட்டையர் கதாபாத்திரத்தில் சத்யராஜ் என திரையுலக முன்னணி நடிகர்கள் இவர்களின் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இவர்களை தொடர்ந்து பார்த்திபன், ரகுமான், ஜெயராம், அமலா பால், ஐஸ்வர்யா லட்சுமி, நயன்தாரா, த்ரிஷா என பல நடிகை நடிகர்கள் நடிக்கின்றனர்.
இப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பார்த்து பார்த்து தேர்வு செய்து அதையே தனது படத்தின் வெற்றியாக நினைத்துக் கொண்டிருந்த நிலையில், அந்த மொத்த சிகரெட்டும் தற்பொழுது வெளியாகி உள்ளதால் இயக்குனர் மணிரத்தினம் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளார்.