Maniratinam Movie : மணிரத்தினம் இயக்க முயற்சி செய்து வரும் மல்டி ஸ்டார் படத்தில் நடிக்க முதல் ஆளாக பிரபல நடிகர் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்தினம் விஜய், சிம்பு, விக்ரம் ஆகியோரை வைத்து மல்டி ஸ்டார் படம் ஒன்றை இயக்க முயற்சி செய்து வருகிறார்.
பொன்னியின் செல்வன் கதையை மையமாக கொண்டு உருவாக உள்ள இந்த படத்தில் நடிக்க முதல் ஆளாக விக்ரம் ஒப்பு கொண்டு கமிட்டாகி விட்டதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.
இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் விரைவில் மற்ற இரண்டு ஹீரோக்களான விஜய், சிம்புவும் நடிக்க ஒப்பு கொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மணிரத்தினம் இறுதியாக இயக்கி இருந்த மல்டி ஸ்டார் படமான செக்க சிவந்த வானம் படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
பொன்னியின் செல்வன் படத்தின் அறிவிப்பிற்காக விஜய், சிம்பு, விக்ரம் ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.