எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை எம்.ஜி.ஆர்., கமல்ஹாசன், கே.பாலச்சந்தர் என திரைத்துறையில் பலரும் திரைப்படமாக எடுக்க முயன்று முடியமாமல் கைவிட்டனர்.
தளபதி 64 டைட்டில் என்ன? இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதிரடி ட்வீட்.!
Ponniyin selvan Manirathnam join hands with thotta tharani – ஆனால், கடந்த சில வருடங்களாக அந்த முயற்சியில் ஈடுபட்டு இயக்குனர் மணிரத்னம் தற்போது வெற்றி பெற்றுள்ளார்.
ஆனால், நடிகர்களின் கால்ஷீட்டை பெறுவதில் இன்னும் சிக்கல் நீடித்து வருகிறது. ஆனாலும், எப்படியோ சமாளித்து நவம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பை அவர் துவங்கவுள்ளார்.
பாகுபலி போல் இப்படம் இரண்டு பாகமாக வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஆனால், பொன்னியின் செல்வன் படத்திற்கு முக்கிய சவாலாக அமைவது கலை இயக்கமே.
ஏனெனில், கல்கியின் எழுத்தை, அந்த பிரம்மாண்டத்தை கண்முன் நிறுத்த நுணுக்கம் தெரிந்த, அனுபவமுள்ள கலை இயக்குனர் தேவை.
இந்த படத்திற்கு அவரே முதுகெலும்பு என்பதை நன்றாக உணர்ந்த மணிரத்னம் கலை இயக்குனர் தோட்டா தரணியை ஒப்பந்தம் செய்துள்ளார்.
எனவே, ரசிகர்களின் எதிர்பார்ப்பை தோட்டாதரணி நிச்சயம் பூர்த்தி செய்வார் என நம்பப்படுகிறது.