Maanaadu Update

Maanaadu Update : மாநாடு படம் பற்றிய அதிரடி அறிவிப்பை வெளியிட்டு சிம்பு ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளார் அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

தமிழ் சினிமாவின் சர்ச்சை நாயகன் என்றால் அது சிம்பு தான். அவர் சும்மா இருந்தாலும் அவரைச் சுற்றி இருப்பவர்கள் எதையாவது ஒன்றை கிளப்பி சிம்புவை சர்ச்சையில் சிக்க வைத்து விடுவார்கள்.

மாபெரும் சர்ச்சையை கிளப்பிய AAA படத்திற்கு பிறகு சிம்பு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருந்த செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்திருந்தார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது சுந்தர் சி இயக்கத்தில் வந்தா ராஜாவாகத்தான் வருவேன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டு வரும் இந்த படத்தை அடுத்து சிம்பு வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் மாநாடு என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் படத்தின் படப்பிடிப்புகள் வரும் பிப்ரவரி மாதத்தில் மூன்றாம் தேதியிலிருந்து தொடங்கும் என அறிவித்துள்ளார்.

சிம்பு வெங்கட்பிரபு கூட்டணியில் முதல் முறையாக படம் உருவாக இருப்பதால் ரசிகர்கள் இப்படத்தின் மீது எல்லையில்லா எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.