arrest
மகளின் தோழி என்றும் பாராமல் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய நபருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Man who misbehaved with friend daughter is sentenced – திருச்சி மாவட்டம் திருவாணைக்காவல் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வந்தவர் நடராஜன். இவருக்கு 15 வயது மகள் இருக்கிறார். அவர் தற்போது 10ம் வகுப்பு படித்து வருகிறார். அவரின் மகளின் தோழி அடிக்கடி அவரின் வீட்டிற்கு வந்துள்ளார். தோழியின் தந்தை என்பதால் நடராஜனை தந்தையாக நினைத்து பழகியுள்ளார். ஆனால், நடராஜனின் நோக்கமோ வேறு மாதிரி இருந்தது.

அந்த இடத்தில் டாட்டூ.. அதீத கவர்ச்சி – அதிர்ச்சியை கிளப்பிய அபிராமியின் போட்டோ இதோ.!

ஒரு நாள் யாரும் இல்லாத போது வீட்டிற்கு வந்த அந்த சிறுமியை மிரட்டி நடராஜன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதற்கு பயந்து கொண்டு அந்த சிறுமியும் யாரிடமும் கூறவில்லை. இதை தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்ட அவர் அடிக்கடி அந்த சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதில் அந்த சிறுமி கர்ப்பமடைந்தார். இந்த விவகாரம் பெற்றோருக்கு தெரியவர இதுபற்றி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. எனவே, அவரை போலீசார் கைது செய்தனர். தற்போது அவருக்கு நீதிபதி 12 வருடங்கள் சிறைத்தண்டனை அளித்து தீர்ப்பளித்தார்.