murder
மனையிடம் ஏற்பட்ட தகராறில் பச்சை குழந்தையை தந்தையே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Man killed his just born baby in delhi – புது டெல்லியில் உள்ள பிந்தபூர் பகுதியில் வசித்து வருப்வர் முகேஷ். இவர் இனிப்பு கடை நடத்தி வருகிறார். இவருக்கு 2018ம் ஆண்டு திருமணம் ஆனது. சமீபத்தில் அவருக்கு குழந்தை பிறந்தது. முகேஷ் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், அவரின் மனைவி அவரின் தாய் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். இது முகேஷுக்கு பிடிக்கவில்லை. இது தொடர்பாக அடிக்கடி அவர்களுக்குள் சண்டை வந்துள்ளது.

தூங்கும் குழந்தைக்கு திருஷ்டி சுற்றலாமா? தெரிந்துகொள்வோமா?

இதில் கோபமடைந்த முகேஷ் குழந்தையை தூக்கி கொண்டு தனது அறைக்குள் சென்றுள்ளார். அதன்பின் 20 நாட்கள் ஆன பச்சை குழந்தையை வாலியில் போட்டு மூழ்கடித்து கொலை செய்துள்ளார்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.