illegal
சோளக்காட்டு பகுதியில் கள்ளக்காதலிடன் காதலன் உடலுறவில் ஈடுபட்ட போது துப்பாக்கி சூட்டில் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Man killed by gunshot on illegal affair issue – தர்மபுரி மாவட்டம் பாலகோடு என்கும் பகுதியில் உலகனஅள்ளி என்கிற கிராமத்தில் வசிப்பவர் சின்னசாமி.

இவரின் சோளக்காட்டினுள் இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. எனவே, துப்பாக்கியால் சுட்டு அவற்றை விரட்டி வந்தார்.

கடந்த 7ம் தேதி இரவு அவர் தனது சோளக்காட்டை சுற்றி வந்தபோது ஒரு இடத்தில் முனகல் சத்தம் கேட்டது. எனவே, காட்டுப்பன்றி என நினைத்து அந்த இடத்தில் சின்னசாமி சுட்டுள்ளார்.

ஆனால், அலறல் சத்தம் கேட்டு அருகில் சென்ற பார்த்த போது அங்கு ஒரு ஆணும், பெண்ணும் இருந்துள்ளனர்.

இதில் ஆணின் தலையில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பலியாகியிருந்தார்.

அப்பெண்ணின் உடலில் குண்டு பாய்ந்திருந்தது. மரணமடைந்த ஆண் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பதும், அப்பெண்ணின் பெயர் ராதா என்பதும் தெரியவந்தது.

கள்ளக்காதலர்களான அவர்கள் காட்டில் உல்லாசம் அனுபவித்து கொண்டிருந்த போது சின்னசாமி சுட்டு விட்டது தெரியவந்தது.

dead body

இக்கொலையை மறைக்க நினைத்த சின்னசாமி சண்முகம் என்பவரின் உதவியுடன் ஆறுமுகத்தின் உடலை சாக்கில் கட்டி எடுத்து சென்று அருகிலிருந்த ரயில் நிலையத்தில் போட்டு விட்டார்.

யாரிடம் கூறக்கூடாது என ராதாவையும் மிரட்டி வைத்துள்ளார். ரயிலின் உடல் மோதி ஆறுமுகத்தி உடல் சிதறிப்போனது.

அதை தற்கொலை என நினைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராதாவின் உடலில் துப்பாக்கிக் குண்டு இருப்பது எக்ஸ்ரேவில் கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே, அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அனைத்து சம்பவங்களும் வெளிச்சத்திற்கு வந்தது.

இதையடுத்து சின்னசாமி, ராதா, சண்முகம் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.