illegal

கள்ளக்காதல் விவகாரத்தில் அரசு அதிகாரி கார் ஏற்றிக்கொலை செய்யப்பட்ட விவகாரம் திண்டுக்கல் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள நத்தம் மீனாட்சிபுரத்தில் வசித்து வந்தவர் சிவபாலாஜி. இவர் அரசு அதிகாரி ஆவார். இவரின் மனைவிக்கும் அதேபகுதியில் வசித்து வரும் பாண்டி என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்துள்ளது. பாண்டி கார் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இது அறிந்த சிவபாலாஜி இருவரையும் கண்டித்துள்ளார்.

இந்நிலையில், சிவபாலாஜியும், பாண்டியின் நண்பர்களும் ஒன்றாக மது அருந்திய போது இந்த விவகாரம் தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. அதன்பின் சிவபாலாஜி அங்கிருந்து சென்றுவிட்டார்.

அதன்பின் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சிவபாலாஜி மீது பாண்டி மற்றும் அவரின் நண்பர்கள் சேர்ந்து கார் ஏற்றி கொலை செய்தனர். இந்த விவகாரத்தில் சிவபாலாஜி மனைவி உட்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.