Clay : ஜார்கண்ட் மாநிலத்தில் வசிப்பவர் காரு, வயது 99. இவர் தனது 11- வது வயதில் இருந்து களிமண்ணை சாப்பிடும் பழக்கத்திற்கு அடிமையானார்.
தன்னுடைய 11 ஆம் வயதில் இருந்து இப்போது வரை ஒருநாள் கூட களிமண்ணை சாப்பிடாமல் இருந்தது இல்லையாம்.
இதுகுறித்து காரு கூறுகையில், ” நான் வறுமையில் இருந்தபோது, தனது 10 குழந்தைகளுக்கு உணவளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.
வறுமையின் காரணமாக தற்கொலை செய்து கொள்ள எண்ணினேன்,. பிறகு ஒருநாள் களிமண்ணை சாப்பிட தொடங்கினேன்.
பின்னர், அதற்கு அடிமையாகி விட்டேன். இப்போதும் களிமண்ணை சாப்பிடுகிறேன், என்னால் அந்த பழக்கத்தை விட முடியவில்லை.
என் குடும்பத்தினர் பலரும் என்னை அந்த பழக்கத்தில் இருந்து விடுபட முயற்சி செய்தனர், ஆனால் என்னால் அந்த பழக்கத்தை நிறுத்த முடியவில்லை ” இவ்வாறு கூறினார்.
இதுகுறித்து காருவின் மகன் சியா ராம் பாஸ்வான் கூறுகையில், ” என் தந்தைக்கு இருக்கும் பழக்கத்தை நிறுத்த எங்கள் குடும்பம் பலமுறை முயற்சி செய்தனர். ஆனால் அவரால் அதை நிறுத்த முடியவில்லை, தினமும் களிமண் எங்கு கிடைக்குமோ அங்கு சென்று 1 கிலோவிற்கு குறையாமல் களிமண்ணை சாப்பிடுவார்.
இருப்பினும் இதுவரை என் தந்தைக்கு எதும் ஆகவில்லை. அதிஷ்டவசமாக அவர் நலமுடன் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார் “இவ்வாறு கூறினார்.