Makein India : ஜப்பானில் மாநாட்டில் பங்குபெற 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் தனிவிமானம் மூலம் டோக்கியோ சென்றார். ஜப்பானில் பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடி கலந்து கொண்டார்.
இன்று, ஜப்பானில் வசிக்கும் இந்திய வம்சாவளிகள் முன் பிரதமர் மோடி உரையாற்றினார். அதில், ” தீபாவளி வெளிச்சம் போல் இந்தியர்கள் உலகம் முழுவதும் பரவி வாழ்கின்றனர்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் நம் நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகின்றனர் . மிகபெரும் மாற்றத்தை கடந்து இந்தியா சென்றுகொண்டிருக்கிறது.
டிஜிட்டல் துறையில் இந்தியா சிறந்த வளர்ச்சியை பெற்று வருகிறது. 100 கோடிக்கும் மேலான செல்போன் இணைப்புகள் இந்தியாவில் காணப்படுகிறது.
கிராமப்புறங்களில் கூட பிராண்ட் பேண்ட் (broadband) இணைப்புகள் கிடைக்கிறது. குறிப்பாக, சிறிய பாட்டில் குளிர்பானத்தை விட ‘ 1GB டேட்டா ‘ குறைவாக கிடைக்கிறது.
மேக் இன் இந்தியா சர்வதேச பிராண்ட் ஆக தற்போது மாறியுள்ளது. தரமான பொருட்களை நாங்கள் எங்களுக்கு மட்டுமின்றி உலகத்துக்கே உற்பத்தி செய்து தருகிறோம்.
மொபைல் உற்பத்தியில் இந்தியா no.1 இடத்திற்கு முன்னேறி வருகிறது. இந்நிலையில், 2022 – இல் ககன்யான் விண்கலம் விண்ணுக்கு அனுப்ப இந்தியா தயாராகி வருகிறது” இவ்வாறு கூறினார்.