கொரானா வைரஸ் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருவது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
Major Changes in Bigg Boss 4 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ் . இதுவரை மூன்று தேசங்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் அக்டோபர் 4ஆம் தேதி அதாவது நாளை முதல் நான்காவது சீசன் தொடங்க உள்ளது.
பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 100 நாட்கள் என்பதற்கு பதிலாக இந்த நிகழ்ச்சியின் நாட்கள் எண்பதாக குறைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் 16 பிரபலங்களை 12 பிரபலங்களாக மாற்றியுள்ளனர். இவை ரசிகர்களுக்கு ஏற்கனவே சாக்கை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது இன்னொரு மாற்றம் குறித்து தெரிய வந்துள்ளது.
பொதுவாக வார இறுதியில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களில் உலகநாயகன் கமலஹாசன் போட்டியாளர்களை சந்தித்து அந்த வாரம் முழுவதும் நடந்த விஷயங்களை பேசுவார். அதன் பின்னர் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்தே வெளியேறப் போவது யார் என்பதை அங்கு அமர்ந்திருக்கும் பார்வையாளர்கள் முன்பு அறிவிப்பார்.
ஆனால் இம்முறை கொரோனா வைரஸ் காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்கூட்டியே இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்பது குறித்த விஷயங்கள் லீக் ஆவது கொஞ்சம் கஷ்டமே. எதையும் கமலஹாசன் அறிவிக்கும் வரை பொறுத்திருந்து தான் ஆக வேண்டும்.
மேலும் உலக நாயகன் கமல்ஹாசனை பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேரில் சந்திக்கலாம் என ஆவலோடு காத்திருந்த ரசிகர்கள் விஜய் டிவியின் இந்த முடிவால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.