இப்போது தான் மெதுவா வெளியே வர தொடங்கி இருக்கோம்.. இனிமே இது கட்டாயம் – ரசிகர்களுக்கு மகேஷ் பாபுவின் அன்பு கட்டளை!
Mahesh Babu Request to Fans : கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ்,
தற்போது இந்தியாவிலும் பரவி வருவதால் கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் இந்தியா முடக்கப்பட்டுள்ளது.
இந்த முடக்கத்தில் இருந்து தற்போது நான் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் இந்தியாவில் கொரானா ஒழிந்த பாடில்லை.
இந்த நிலையில் தெலுங்கு நடிகரான மகேஷ்பாபு தன்னுடைய ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
இப்போது தான் கொஞ்சமாக வெளியே வர தொடங்கியுள்ளோம். இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாம் மாஸ்க் அணிவது கட்டாயம். எனவே ஒவ்வொரு முறையும் வெளியே செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்லுங்கள் என தனது ரசிகர்களுக்கு எடுத்துக் கூறியுள்ளார்.