பேஸ்புக் பக்கத்தில் ஈஸ்வரும் மகாலட்சுமியும் மாறி மாறி கொஞ்சி கொண்ட சேட்டிங் ஸ்க்ரீன் ஷாட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளியாக அறிமுகமாகி அதன் பின்னர் சீரியலில் நடிக்க தொடங்கியவர் மகாலக்ஷ்மி.
இவருக்கும் சீரியல் நடிகர் ஈஸ்வருக்கு ம் தொடர்பு இருப்பதாக ஈஸ்வரின் மனைவியும் நடிகையுமான ஜெயஸ்ரீ குற்றம் சாட்டி போலீசில் புகார் அளித்தார். இதனால் ஈஸ்வரும் அவரது தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது மகாலட்சுமியும் ஈஸ்வரும் முகநூல் பக்கத்தில் பையா, பப்பு என மாற்றி மாற்றி கொஞ்சி கொண்ட ஸ்க்ரீன் ஷாட் புகைப்படம் வைரலாகி வருகிறது.
மேலும் ஜெயஸ்ரீ, மகாலக்ஷ்மியுடன் வாழ என்னிடம் விவாகரத்து கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும் பெத்த மக்களிடமும் தவறாக நடந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.