இனி உங்கள கலாய்க்கிறதுல அர்த்தமே இல்ல என மகாலட்சுமி வெளியிட்ட போட்டோவை பார்த்து வாய் அடைத்துள்ளனர் ரசிகர்கள்.

தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி அதன் பின்னர் சீரியல் நடிகையாக பல்வேறு சீரியல்களில் நடித்து வந்தவர் மகாலட்சுமி. தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார்.

ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற மகாலட்சுமி திடீரென தயாரிப்பாளர் ரவீந்திரனை காதல் திருமணம் செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் திருமண பேச்சையே இவர்களின் திருமணம் ஓவர்டேக் செய்தது என்று சொல்லலாம்.

மகாலட்சுமி திருமணத்தால் பாதிக்கப்பட்ட 90ஸ் கிட்ஸ் பலரும் மீம்ஸ் போட்டு இவர்களை கலாய்த்து வந்தனர். இருந்ததிலும் இருவரும் இதற்கெல்லாம் கொஞ்சமும் அஞ்சாமல் தொடர்ந்து சமூக வலைதளங்களில் போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருந்தனர். இப்படியான நிலையில் மகாலட்சுமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரவீந்திரனுடன் இருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டு என்னுடைய கையைப் பிடித்துக் கொள்ளுங்கள் என்னுடைய இதயத்தை பிடித்துக் கொள்ளுங்கள் வாழ்நாள் முழுவதும் என கேப்ஷனோடு பதிவு செய்துள்ளார்.

மகாலட்சுமியின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பெரும்பாலானார் அவருக்கு வாழ்த்துக்களை மட்டுமே தெரிவித்துள்ளனர். இதுவரை கலாய்த்து வந்தவர்கள் கூட இனி இவர்களை கலாய்ப்பதில் அர்த்தமில்லை என மனம் மாறி வாழ்த்தி உள்ளனர். சமூக வலைதளங்கள் முழுவதும் இவர்களது புகைப்படங்கள் தான் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.