சிம்பு வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் இருந்து அவராக தான் விலகி கொண்டாரோ என்ற சந்தேகம் சிம்புவின் அடுத்தப்பட அறிவிப்பால் எழுந்துள்ளது.
Maghaa Maanaadu : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் தற்போது கன்னட ரீமேக் திரைப்படம் ஒன்று படமாகி வருகிறது.
இந்த படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருந்த மாநாடு திரைப்படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் இந்த படத்தில் இருந்து சிம்பு வெளியேற்றப்பட்டார். இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியானது.
நம்பி மோசம் போன சிம்பு.. இவ்வளவு சர்ச்சைக்கும் இந்த இருவர் தான் காரணம் – வெளியான அதிர்ச்சி தகவல்.!
இந்நிலையில் தற்போது சிம்புவின் அடுத்த படத்தை அவரே இயக்கி அவருடைய பேனரிலேயே தயாரிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த படத்திற்கு மகா மாநாடு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனால் சிம்பு இந்த படத்திற்காக தான் மாநாடு படத்தில் இருந்து விலகி கொண்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.