விஜய் படத்தால் தன்னுடைய படத்திற்கு வந்த சோதனையை கூறி வருத்தப்பட்டுள்ளார் மகேஷ் பாபு.
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மகேஷ் பாபு, இவர் ஸ்பைடர் படத்தின் மூலமாக நேரடி தமிழ் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்நிலையில் மகேஷ் பாபு பிரபல பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார், அதில் கில்லி திரைப்படம் நான் நடித்திருந்த ஒக்காடு படத்தின் ரீமேக் தான்.
இந்த படத்திற்கு சென்னையில் நல்ல வரவேற்பு கிடைத்தது, இந்த படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்றி அதில் விஜய் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானதும் என்னுடைய படத்தை தியேட்டர்களில் தூக்க தொடங்கி விட்டனர். அது எனக்கு கஷ்டமாக இருந்தது என கூறியுள்ளார்.
மேலும் என்னுடைய படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் ஆகும் போது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. நல்ல கதை அமைந்தால் விஜயுடன் சேர்ந்து நடிக்கவும் நான் ரெடி எனவும் கூறியுள்ளார்.